ரெ.கா.வின் “விமர்சன முகம் 2″
7/9/2012இல் லுனாஸ் தியான ஆசிரம மண்டபத்தில் வெளியீட்டு விழாவின் போது சுங்கை பட்டாணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் தமிழ் மாறன் நிகழ்த்திய உரை: Read the rest of this entry »
7/9/2012இல் லுனாஸ் தியான ஆசிரம மண்டபத்தில் வெளியீட்டு விழாவின் போது சுங்கை பட்டாணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் தமிழ் மாறன் நிகழ்த்திய உரை: Read the rest of this entry »
என் வாசக அன்பர்களுக்கு,
எனது “அந்திம காலம்” என்னும் நாவல் மலேசியாவில் உயர்நிலைப்பள்ளிகளில் (ஆறாம் படிவம்) தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
ரெ.கார்த்திகேசு என்னும் மலேசிய எழுத்தாளரின் அண்மைய நூல்களான “நீர் மேல் எழுத்து” என்னும் சிறுகதைத் தொகுப்பும் “விமர்சன முகம் 2″ என்னும் கட்டுரைத் தொகுப்பும் மின்னூல்களாக Kobo Books தளத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மின்னூல்கள் புத்தக வர்த்தகச் சந்தையில் விற்குமா என்னும் கேள்விக்கு விடைகாண சோதனை முறையிலேயே இந்த நூல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.Kobo Books தளத்தில் இடம்பெறும் முதல் தமிழ் மின்னூல்களும் இவையே. ஆங்கில மொழியில் உள்ள மின்னூல்களில் உள்ள அனைத்து அம்சங்களும் கொண்ட நூல்களாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
Kobo Books தளத்தில் search பகுதியில் நூல்களின் பெயரையோ அல்லது “ரெ.கார்த்திகேசு” என்னும் ஆசிரியர் பெயரையோ தமிழிலேயே இட்டுத் தேடினால் கிடைக்கும். நூல் ஒவ்வொன்றுக்கும் ஆகக் குறைந்த விலையான $1.99 என்ற விலையே இடப்பட்டுள்ளது. நூல்களுக்கு இதற்கும் குறைவான விலை வைப்பதை Kobo Books ஆதரிக்கவில்லை. கடன் அட்டை அல்லது PayPal வழியாகப் பணம் செலுத்திப் பெறலாம்.
Kobo Books தளத்தில் நூல்களை இடம் பெறச் செய்ய நூல் வெளியீட்டாளர்களுக்கு அது எந்தக் கட்டணமும் விதிப்பதில்லை. விற்பனையிலிருந்து மட்டுமே ஒரு சிறு விகிதத்தை அது எடுத்துக்கொள்ளுகிறது.
இணைய வாசகர்கள் இந்த முயற்சியை ஆதரித்து இன்னும் பலர் இந்த முயற்சியில் ஈடுபட உதவலாம்.
(சை.பீர் முகமது கவிதை நூலின் விமர்சனம்)
புதுக்கவிதை என்பது அதன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது என நான் அதனைப் படிக்க நேரும்போதெல்லாம் நினைப்பதுண்டு. அப்துல் ரகுமான், மேத்தா, வைரமுத்து ஆகியோரின் புதுக்கவிதைகள் மரபிலிருந்து புதிதாகப் பிரிந்தவை ஆதலாலும், அந்தக் குழுமக் கவிஞர்கள் மரபுக்கவிதையின் அழகியலையும் அதன் ஆன்மாவையும் சுவைத்திருந்ததாலும், அந்த “சுட்ட சட்டி சட்டுவத்தில்” கவிதையின் ஆன்மா கொஞ்சம் ஒட்டியிருந்தது. Read the rest of this entry »
ஏலக்காய் போட்டதனால் இறைச்சிக் குழம்பிலிருந்து கும்மென்று மணம் வந்தது. அடுப்பினடியில் உட்கார்ந்திருந்த பார்வதிக்கு வியர்த்துக் கொட்டியது. இருந்தாலும் இன்று இப்படி உட்கார்ந்து பிள்ளைகளுக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி இருந்தது. Read the rest of this entry »
அறிவியல் புனைகதை
இருபது மாணவர்கள் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் வேன்டன்பர்க் வழக்கமாக தாமதமாக வருபவர்தான். ஆனால் பத்து நிமிடத்துக்கு மேல் தாமதமாகாது. பதினைந்து நிமிடம் வரை பேராசிரியர் வரவில்லையென்றால் மாணவர்கள் கலைந்து செல்லலாம் என்ற விதி உண்டு. இருந்தும் மாணவர்கள் காத்திருந்ததன் காரணம் வேன்டன்பர்கின் வகுப்பு சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். அதை எதிர்பார்த்துத்தான்…! Read the rest of this entry »
உலகத் தமிழர்கள், இந்துக்கள் அனைவருக்கும் மலேசியாவிலிருந்து எங்கள் குடும்பத்தினரின் தீபாவளி வாழ்த்துக்கள். Read the rest of this entry »
(ஜுன் 2009இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலை கழகக் கருத்தரங்கில் படைத்த கட்டுரை)
மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றம் அநேகமாக இந்த இலக்கிய வடிவம் தமிழ்நாட்டில் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்டது. மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வாளர்களால் ஏற்கனவே விரிவாக பதியப்பட்டுள்ளன. (எ-கா.: மா. இராமையா: மலேசியத் தமிழ் இலக்கியக் களஞ்சியம்; பால பாஸ்கரன்: மலேசியத் தமிழ்ச் சிறுகதை; வ.முனியன்: மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் (மலேசியத் தமிழ் இலக்கியம் 2007; பக்.177)) முதலியவை. Read the rest of this entry »
பூஜைக்கு கியூ பிடித்து நின்றவர்களில் சிவசங்கரன் முதலாவதாக நின்றார். அவர் கோயில் தலைவர். ஆகவே ஐயனார் பூஜையில் அவருக்குத்தான் முதல் மரியாதை. Read the rest of this entry »
“நீண்டகால அடிப்படையில், ஒரே கோளத்தில் மட்டும் வாழ முடிந்த எந்த இனமும் அழியவே செய்யும். மனித இனம் இன்னும் ஆயிரம், நூறாயிரம் ஆண்டுகள் பிழைத்திருப்பதென்றால் நாம் பிற கோள்களை ஆக்கிரமிக்க வேண்டும். எதிர் காலத்தில் பூமியில் வாழும் மனிதர்களைவிட அதிகமானோர் பூமிக்கு வெளியே வாழ்வார்கள். – மைக்கல் கிரிஃபித், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன நிர்வாகி. Read the rest of this entry »