கார்த்தியாயினி தனது சுகமான இருக்கை/படுக்கையில் கொஞ்சம் புரண்டபோது ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்’ என்ற கருத்து அவர் பிரக்ஞையுள் குதித்தது. அதோடு தூக்கமும் கலைந்தது. என்ன இது? சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்?’ Read the rest of this entry »
வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்
காஞ்சனா தாமோதரனின் “மரகதத் தீவு” சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளையும் காஞ்சனா தாமோதரனின் “மரகதத் தீவு” சிறுகதைத் தொகுப்பைப் படித்து விட்டு அவர் கற்பனா மனம் எப்படிப்பட்டது என்பதைச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய முதற் கதையிலிருந்தே எனக்கு அதற்கான வாசகங்கள் கிடைத்தன: Read the rest of this entry »
முன்னுரை
எஸ்பொவின் எழுத்துக்கள் பற்றிக் கேள்விப்பட்டு அவற்றை அறிந்துகொள்ள வேண்டி நான் படிக்க ஆரம்பித்தது அண்மையில்தான். மலேசியாவில் உள்ள நாங்கள் தமிழ் இலக்கிய வாசிப்பு அனுபவத்திற்காக தமிழ் நாட்டிலிருந்து வெளிவருகின்ற நூல்களையும் இதழ்களையும் நம்பியே காலம் கழித்து வந்ததால் அந்த உலகம் புறக்கணித்து வந்த இலங்கைத் தமிழ் இலக்கியத்தை அணுக்கமாக அறிந்து கொள்வது என்பது சுலபம் அல்ல. Read the rest of this entry »
சிறுகதை
பினாங்கில் அன்று கொஞ்சம் பிசு பிசுவென்று மழை தூறியவாறிருந்தது. நல்ல வேளை காரில் குடை இருக்கிறது. மல்லியை மழலைப் பள்ளியில் இறக்கிவிடும் போது நனையாமல் கொண்டு விட வேண்டும். மல்லி, என் மகன் வழிப் பேத்தி. பெற்றோர் இருவரும் காலை முதல் மாலை வரை முழு நேர வேலையில் இருப்பதால் அவளைக் குழந்தைகள் பள்ளியில் கொண்டு விடுவதும் திரும்பக் கொண்டு வருவதும் என் கடமைகள். Read the rest of this entry »
(டிசம்பர் 09-இல் “மின்தமிழ்” மடலாடல் குழுவில் வெளிவந்த கேள்வி-பதில் பகுதி):
தமிழ்த்தேனீ:
எந்த வயதில் எழுத ஆரம்பித்தீர்கள்? எழுதவேண்டும் என்கிற சிந்தனை எப்போது பிறந்தது உங்களுக்கு? அப்படி எழுதவேண்டும் என்கிற சிந்தனை பிறந்ததற்கு தூண்டுகோலாக அமைந்த நிகழ்ச்சி எது? அல்லது உங்களை எழுதத் தூண்டியவர் யார்?
Read the rest of this entry »
வீட்டின் முன் பக்க இரும்பு கேட் துருப்பிடித்துக் கிடந்தது. மெல்லத் தள்ளினாள் சிவகாமி. மெதுவாகக் கிறீச்சிட்டுத் திறந்து கொண்டது. நாதாங்கி பொருத்தப்பட்டிருக்கவில்லை. பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தாலும் பூட்டப்படாமல் ‘ஓ’ என்று திருகிக்கொண்டு கிடந்தது. Read the rest of this entry »
அறத்துப் பாலும் பொருட் பாலும் எழுதிய வள்ளுவர் என்னும் பேரறிஞர், சுத்தமான கவிஞனாக மாறி இலக்கிய நயம் சொட்டச் சொட்ட, சிற்றின்ப உணர்வில் திளைத்து எழுதியது காமத்துப் பால். Read the rest of this entry »
அன்றிரவு எனக்கு உணவுப் பிரச்சினை அத்தனை பூதாகாரமாக உருவெடுக்கும் என நான் நினைக்கவில்லை. அன்று மாலை மனைவி “இன்னைக்கு சாப்பிட ஏதாச்சும் கடையில வாங்கிக்கிறிங்களா!” என்று கேட்ட போது கணினியில் எதையோ படித்துக் கொண்டிருந்தவன் கவனமில்லாமல் “சரி” என்று சொல்லிவிட்டேன். Read the rest of this entry »
Tamil Electronic and Print Media: Reality and Challenges
(கருப்பொருளுரை)
படைப்பு: ரெ.கார்த்திகேசு, Ph.D.
முன்னாள் பேராசிரியர், பொது மக்கள் தொடர்புத் துறை,
மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம்.
பன்னாட்டுத் தமிழ் மொழியியல் மாநாடு:
23-24 அக்டோபர் 2009,
மலாயாப் பல்கலைக் கழகம்,
குவால லும்பூர். Read the rest of this entry »
(மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் நடத்தும் புத்தகப் பரிசுத் திட்டத்தில் 2009 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் 24/10/09 அன்று திட்டத்தின் தலைமை நடுவர் என்ற முறையில் ஆற்றிய உரை.)
இத்திட்டத்தில் இவ்வாண்டு சிறுகதைக்கான ஆண்டு என்ற முறை வருவதால் 2005 முதல் 2008 வரை
மலேசிய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட அனைத்துச் சிறுகதை நூல்களும் பரிசீலனைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டன. Read the rest of this entry »