(சை.பீர் முகமது கவிதை நூலின் விமர்சனம்)
புதுக்கவிதை என்பது அதன் ஆன்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகிறது என நான் அதனைப் படிக்க நேரும்போதெல்லாம் நினைப்பதுண்டு. அப்துல் ரகுமான், மேத்தா, வைரமுத்து ஆகியோரின் புதுக்கவிதைகள் மரபிலிருந்து புதிதாகப் பிரிந்தவை ஆதலாலும், அந்தக் குழுமக் கவிஞர்கள் மரபுக்கவிதையின் அழகியலையும் அதன் ஆன்மாவையும் சுவைத்திருந்ததாலும், அந்த “சுட்ட சட்டி சட்டுவத்தில்” கவிதையின் ஆன்மா கொஞ்சம் ஒட்டியிருந்தது. Read the rest of this entry »
ஏலக்காய் போட்டதனால் இறைச்சிக் குழம்பிலிருந்து கும்மென்று மணம் வந்தது. அடுப்பினடியில் உட்கார்ந்திருந்த பார்வதிக்கு வியர்த்துக் கொட்டியது. இருந்தாலும் இன்று இப்படி உட்கார்ந்து பிள்ளைகளுக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி இருந்தது. Read the rest of this entry »
அறிவியல் புனைகதை
இருபது மாணவர்கள் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் வேன்டன்பர்க் வழக்கமாக தாமதமாக வருபவர்தான். ஆனால் பத்து நிமிடத்துக்கு மேல் தாமதமாகாது. பதினைந்து நிமிடம் வரை பேராசிரியர் வரவில்லையென்றால் மாணவர்கள் கலைந்து செல்லலாம் என்ற விதி உண்டு. இருந்தும் மாணவர்கள் காத்திருந்ததன் காரணம் வேன்டன்பர்கின் வகுப்பு சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். அதை எதிர்பார்த்துத்தான்…! Read the rest of this entry »
உலகத் தமிழர்கள், இந்துக்கள் அனைவருக்கும் மலேசியாவிலிருந்து எங்கள் குடும்பத்தினரின் தீபாவளி வாழ்த்துக்கள். Read the rest of this entry »
(ஜுன் 2009இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலை கழகக் கருத்தரங்கில் படைத்த கட்டுரை)
மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றம் அநேகமாக இந்த இலக்கிய வடிவம் தமிழ்நாட்டில் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்டது. மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வாளர்களால் ஏற்கனவே விரிவாக பதியப்பட்டுள்ளன. (எ-கா.: மா. இராமையா: மலேசியத் தமிழ் இலக்கியக் களஞ்சியம்; பால பாஸ்கரன்: மலேசியத் தமிழ்ச் சிறுகதை; வ.முனியன்: மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் (மலேசியத் தமிழ் இலக்கியம் 2007; பக்.177)) முதலியவை. Read the rest of this entry »
பூஜைக்கு கியூ பிடித்து நின்றவர்களில் சிவசங்கரன் முதலாவதாக நின்றார். அவர் கோயில் தலைவர். ஆகவே ஐயனார் பூஜையில் அவருக்குத்தான் முதல் மரியாதை. Read the rest of this entry »
“நீண்டகால அடிப்படையில், ஒரே கோளத்தில் மட்டும் வாழ முடிந்த எந்த இனமும் அழியவே செய்யும். மனித இனம் இன்னும் ஆயிரம், நூறாயிரம் ஆண்டுகள் பிழைத்திருப்பதென்றால் நாம் பிற கோள்களை ஆக்கிரமிக்க வேண்டும். எதிர் காலத்தில் பூமியில் வாழும் மனிதர்களைவிட அதிகமானோர் பூமிக்கு வெளியே வாழ்வார்கள். – மைக்கல் கிரிஃபித், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன நிர்வாகி. Read the rest of this entry »
“நாங்கள் பருவநிலை நாத்திகர்கள் என அழைக்கப்பட்டுள்ளோம். சிலர் மனித குலத்துக்கு எதிராக நாங்கள் புரியும் குற்றத்துக்காக எங்களை நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டும் என்றும் சொல்கிறார்கள். நாங்கள் புரியும் குற்றத்தால் மில்லியன் கணக்கில் மக்கள் மடிவார்கள் என்கிறார்கள்.” – டேவிட் பெல்லமி, பிரிட்டிஷ் அறிவியலாளர். Read the rest of this entry »
விரைவாக உருகும் பனிக்கட்டி ஆறுகளும், பனிக்கட்டி பரப்புக்களும் கடல் மட்டத்துக்குக் கீழுள்ள நாடுகளை இப்போதே மருட்டுகின்றன. தீவு நாடான மால்டிவ்ஸ் போன்றவை கடுமையான அபாயத்தில் உள்ளன. பெரிய நகரங்களான ஷங்ஹாய், லேகோஸ் போன்றவையும் மூழ்கும் அபாயத்தில் உள்ளன – இயற்கைவளப் பாதுகாப்பு மன்றம், அமெரிக்கா. Read the rest of this entry »
திடுக்கிட வைக்கும், திகைக்க வைக்கும் சாதனைகள் தொடர்ந்து உற்பத்தியாகிக்கொண்டே இருக்கின்றன. ஒரு முடிவில்லாப் பயணத்தின் புதிய தொடக்கங்கள். நம்பிக்கை, லட்சியம், உந்துசக்தி ஆகியவை தொடர்ந்து தீவிரமாக மூட்டப்படுகின்றன- மலேசியா சாதனைப் புத்தகம் Read the rest of this entry »